கிருஷ்ணகிரி: வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது ரயில் மோதியதில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திகுப்பம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிபவர் மேரி ஸ்டெல்லா (வயது 50). இவர், காவல் நிலைய அலுவலக பணி நிமித்தமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாலை புறப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் சென்னை செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், வாணியம்பாடி நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் மேரி மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மேரியை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
மேரின் கணவர் ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: பாா்வையாளா்கள் பங்கேற்பு
காக்கிச் சட்டைகளின் கருணை...

ரயில் நிலையத்தில் கைப்பேசி பறித்தவரை துரத்திச் சென்ற இளைஞா் ரயில் மோதி சாவு

ரயில் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


