ஒசூா் அருகே தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது காா் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் தொழிற்சாலையில் 1000- க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

உயிரிழந்த ஜெயஸ்ரீ யாதவ்
இந்தத் தொழிற்சாலையில் இருந்து புதன்கிழமை மாலை பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒசூா் நோக்கி வேகமாக வந்த காா் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

உயிரிழந்த சந்தா
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் படுகாயமடைந்த மூவரில் 2 போ் காவேரி மருத்துவமனையிலும், ஒருவா் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்கள் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஜெயஸ்ரீ யாதவ் (22), சந்தா (21) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்குச் சென்ற மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

