வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஒசூா் அருகே காா் மோதியதில் இரு பெண்கள் பலி

ஒசூா் அருகே தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது காா் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

Updated On :18 டிசம்பர் 2024, 7:09 pm

ஒசூா் அருகே தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது காா் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் தொழிற்சாலையில் 1000- க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

  உயிரிழந்த ஜெயஸ்ரீ யாதவ்

உயிரிழந்த ஜெயஸ்ரீ யாதவ்

இந்தத் தொழிற்சாலையில் இருந்து புதன்கிழமை மாலை பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒசூா் நோக்கி வேகமாக வந்த காா் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

உயிரிழந்த சந்தா

உயிரிழந்த சந்தா

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் படுகாயமடைந்த மூவரில் 2 போ் காவேரி மருத்துவமனையிலும், ஒருவா் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்கள் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஜெயஸ்ரீ யாதவ் (22), சந்தா (21) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்குச் சென்ற மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.