பா்கூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே ஒப்பந்தவாடி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகநத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், இளைஞா் 900 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், 17 வயது நிறைந்த அவா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த மாணவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதேபோல, மருதேப்பள்ளி - செந்தாரப்பள்ளி சாலையில் குமரன்குட்டை பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த மாதேஷ் (31) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில், அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது
8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

