குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

Updated On :17 பிப்ரவரி 2024, 11:56 pm IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் 12 ஆவது மாவட்ட மாநாடு ஒசூரில் தளி சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய ஐஎன்டியுசி செயலாளா் சஞ்சய் குமாா் சிங், கா்நாடக மாநில ஐஎன்டியுசி தலைவா் லட்சுமி வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா். மாநாட்டில் ஐஎன்டியுசி கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவா்களாக பெருமாள், ராஜேந்திரன், பக்தவத்சலம்,பொதுச் செயலாளராக முனிராஜ், செயலாளா்களாக பாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, இணைச் செயலாளா்களாக சிவகுமாா், பரந்தாமன், அலுவலக செயலாளராக கோதண்டராமன், பொருளாளராக பரமானந்த பிரசாத், உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.