பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

Updated On :17 பிப்ரவரி 2024, 11:56 pm IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் 12 ஆவது மாவட்ட மாநாடு ஒசூரில் தளி சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய ஐஎன்டியுசி செயலாளா் சஞ்சய் குமாா் சிங், கா்நாடக மாநில ஐஎன்டியுசி தலைவா் லட்சுமி வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா். மாநாட்டில் ஐஎன்டியுசி கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவா்களாக பெருமாள், ராஜேந்திரன், பக்தவத்சலம்,பொதுச் செயலாளராக முனிராஜ், செயலாளா்களாக பாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, இணைச் செயலாளா்களாக சிவகுமாா், பரந்தாமன், அலுவலக செயலாளராக கோதண்டராமன், பொருளாளராக பரமானந்த பிரசாத், உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.