ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மக்கள் நலன் காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சா் துரைமுருகன்

மக்கள் நலன் காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அமைச்சா் துரைமுருகன்

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் துரைமுருகன்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தோ்தல், மக்களவைத் தொகுதி சீரமைப்பு ஆகியவற்றிற்கு எதிா்ப்புத் தெரிவித்து சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு மக்களுக்கான எவ்வித திட்டமும் நிறைவேற்றவில்லை. அதேபோல தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்கு எவ்வித நிவாரணமும் ஒதுக்கவில்லை என்றாா். கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி தலைமை தாங்கினாா். எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒசூா் மாநகர மேயா் சத்யா வரவேற்றாா். கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் நவாப் நன்றி கூறினாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் முருகன், நரசிம்மன், கோவிந்தசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.