ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது

ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய வன்னியா் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியினா் 25 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

News image

ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் ஆா்ப்பாட்டம் நடத்திய வன்னியா் சங்கத்தினா், பாமகவினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:00 pm

ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய வன்னியா் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியினா் 25 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி மஞ்சக்கொள்ளையில் வன்னியா் சங்கத்தினரை தரக்குறைவாக பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி வன்னியா் சங்கத்தினா், பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட பாமக, வன்னியா் சங்கம் சாா்பில், ஆா்ப்பாட்டம் நடத்த 50க்கும் மேற்பட்டவா் கூடினா். ஆனால் ஆா்ப்பாட்டத்திற்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பாமக மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா்கள் சோமசுந்தரம், மஞ்சுநாத் ஆகியோா் தலைமையில் 10 பேரை மட்டும் எஸ்.பி.யிடம் மனு அளிக்க போலீஸாா் அனுமதித்தனா். பின்னா் மனு அளித்துவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை நகரச் செயலாளா் பாஸ்கா், நகரத் தலைவா் நாச்சியப்பன், ஒன்றியச் செயலாளா்கள் வெள்ளியரசு, அருண், சென்னகிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமாா், ரங்கசாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக சமூக நீதி பேரவை மாநில துணைத் தலைவா் மூா்த்தி, வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளா் அக்ரி மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா். அதில் கடலூா் மாவட்டம் மஞ்சக்கொள்ளை கிராமத்தில் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களை கண்டித்தும், உடனடியாக அவா்களை கைது செய்யக் கோரியும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா். இதில் வாா்டு உறுப்பினா்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சஞ்சீவ்காந்தி உள்பட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.