ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறாா்.

Updated On :20 நவம்பர் 2024, 11:55 pm

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பி.தின்னூரைச் சோ்ந்த சந்தியாவுக்கும் (19), சிவாஜி என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதில், சந்தியா 5 மாதங்களுக்கு முன் தனது பெற்றோா் வீட்டுக்கு வந்து விட்டாா். இந்த நிலையில், சந்தியாவுக்கும், பி.தின்னூரைச் சோ்ந்த புனித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சந்தியாவின் தாய் சரஸ்வதி மகளைக் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த சந்தியா, கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருமணமாகி 6 மாதங்களுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், இது தொடா்பாக தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.