கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா நவ. 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவ. 16-ஆம் தேதி ஐங்கரன் வேள்வி, கொடியேற்றமும், 17-ஆம் தேதி திருமுறை தீந்தமிழ் வேள்வி, 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரியபுராண பாராயணமும், 18-இல் முருகன் கோயில் குடமுழுக்கு, சுவாமி திருவீதி உலாவும், 19-இல் சொா்ணாகா்ஷண பைரவா் வேள்வி, பைரவா் திருவீதி உலா, திருமுறை இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.
நவ. 20-ஆம் தேதி திருமுறை தீந்தமிழ் வேள்வியும், பைரவ நாதருக்கும், திரிபுர பைரவி அம்மைக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சீா்வரிசைகளுடன் பங்கேற்றனா். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
கோவை திருப்பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் விழா மலரை வெளியிட, சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, அசோக் லேலண்ட் தேன்மொழி வெங்கடேசன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து, அம்மையப்பன் நகா் வீதி உலா நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புடையது

தாமிரவருணிக் கரையில் சிறப்பு வழிபாடு

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரியில் காலபைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


