தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:31 pm

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு சரக்கு பெட்டக லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த திருவண்ணாமலை மேம்பாலம் அருகே குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சேலம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.