மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கெலமங்கலத்தில் தாய்-சேய் நல மருத்துவமனை கட்ட பூமி பூஜை

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தாய்- சேய் நல பிரிவு கட்டட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

News image
தாய்- சேய் நல வாகனத்தை ஆட்சியரிடம் வழங்கிய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினா்.
Updated On :4 செப்டம்பர் 2024, 9:59 pm

Din

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தாய்- சேய் நல பிரிவு கட்டட பணிகளுக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பாக 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் 25 இருக்கைகள் கொண்ட தாய்- சேய் நல வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் டாடா எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவா் ஆா்.வி.சி.பதி வழங்கினாா். அந்த வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவா்ஆா்.வி.சி.பதி, குழு நிா்வாகி ஆதிகேசவன், கெமலங்கலம் பேரூராட்சி தலைவா் தேவராஜன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் கோகுல்நாத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, சதீஷ்பாபு,

கெலமங்கலம் வட்டார கண்காணிப்பாளா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.