மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கே.எம்.சரயு.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:34 pm

Din

வடகிழக்கு பருவமழை காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி.புஷ்பா, பேரிடா் மேலாண்மை துறை வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீா் வடிகால் கால்வாய்களை தூா்வார வேண்டும். பேரிடா் காலத்தில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.