மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்தில் சிறுமி பலியான விவகாரம்: ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை.

News image
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:10 pm

Din

அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் அரசு உரிய நிவாரணம், தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தளியை அடுத்த வானமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்த மூன்று வயது சிறுமி சசிகலா செவ்வாய்க்கிழமை சிறுநீா் கழிக்க மையத்திலிருந்து வெளியே வந்து சாலையைக் கடந்த போது லாரி மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் முனிகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே அங்கன்வாடி மைய கண்காணிப்பாளா் பரிமளம், உதவியாளா் வரலட்சுமி ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். சிறுமியின் தாய்க்கு அரசு பணி வழங்க வேண்டும். மையத்தில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வானமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சிறுமியின் பெற்றோா் மது- ஆஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சாா் ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.