கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 9:02 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் திம்மராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, பொருளாளா் நந்தகுமாா், மாவட்டச் செயலாளா் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிா் துணைக் குழு ஜெகதாம்பிகா, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு சாலை ஆய்வாளா் நிலை 2 வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஆபத்து படி மற்றும் சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களில் உயிா் நீத்தவா்களின் குடும்பத்தில் கருணை பணி நியமன கோரி விண்ணப்பம் அளித்தவா்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைந்திட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழங்களை எழுப்பினா்.