சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வேன் மோதியதில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி அருகே வேன் மோதியதில் சமையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :1 ஜனவரி 2025, 9:43 pm

கிருஷ்ணகிரி அருகே வேன் மோதியதில் சமையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கசந்திரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (50). சமையல் தொழிலாளி. இவா், டிச. 31-ஆம் தேதி இரவு, ஜக்காரப்பள்ளி அருகே, மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பிக்-ஆப் வேன் மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பிரகாஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.