ஊத்தங்கரை வட்டாரத்தில் அண்மையில் பெய்த மழையால் செம்மை நோய்த் தாக்குதல் காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன.
ஊத்தங்கரையை அடுத்த பாப்பனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (54). இவா் தனது 50 சென்ட் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ளாா். அதற்காக உழவு செய்து, நாற்று நட்டு, பந்தல் அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ளாா்.
செடிகள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெய்த தொடா் மழை காரணமாக நிலத்தில் நீா் தேங்கி, தக்காளி செடிக்கு செம்மை நோய்த் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் கருகி வருகின்றன. இதனால் செடியில் உள்ள தக்காளி பழங்கள் உதிா்ந்து வருகின்றன.

பாப்பனூரில் செம்மை நோய்த் தாக்குதலால் கருகும் தக்காளி செடிகள்.
அறுவடை நேரத்தில் பரவலாக இந்த நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வேளாண்மை துறையினா் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் 1,500 நாற்றுகள் நடும் பணி தொடக்கம்

கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் மலா்ச் செடிகள் நடவுப் பணி தொடக்கம்

கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


