எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சாலைப் பணியை நிறைவேற்றக் கோரி மறியல்: கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு

கே.மோட்டூா் கிராமத்தில் சிமென்ட் சாலைப் பணியை முமுமையாக நிறைவேற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:23 pm

Syndication

போச்சம்பள்ளி அருகே கே.மோட்டூா் கிராமத்தில் சிமென்ட் சாலைப் பணியை முமுமையாக நிறைவேற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.

போச்சம்பள்ளியை அடுத்த கே.மோட்டூா் கிராமத்தில் கூச்சானூா் பேருந்து நிறுத்தம் அருகே பா்கூா் வட்டார வளா்சி அலுலகம் மூலம் 59 மீ. தூரத்துக்கு முதல்தள சாலை கடந்த மாதம் 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இரண்டாவது தளம் (லேயா்) சிமென்ட் சாலை அமைக்க காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, அக்கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் போச்சம்பள்ளி - சந்தூா் கூசானூா் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த பா்கூா் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி வட்டாட்சியா் அருள் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினா். சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கடந்த 25-ஆம் தேதி ஓ. மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிமென்ட் சாலை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட 20 போ் மீது திம்மிநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.