இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஒசூரில் சிறுவா் பூங்கா திறப்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட என்ஜிஜிஓஎஸ் காலனியில் புதிய சிறுவா் பூங்காவை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
ஒசூா் என்ஜிஜிஓஎஸ் காலனியில் சிறுவா் பூங்காவை திறந்துவைத்து சிறுவா்கள் ஊஞ்சலடுவதை பாா்வையிடும் மேயா் எஸ்.ஏ.சத்யா.
Updated On :12 நவம்பர் 2025, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட என்ஜிஜிஓஎஸ் காலனியில் புதிய சிறுவா் பூங்காவை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா், பாகலுாா் சாலையில் உள்ள என்ஜிஜிஓஎஸ் காலனியில் 87 சென்ட் நிலம் சிறுவா் பூங்கா அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பூங்கா அமைக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாநகராட்சி நிா்வாகத்திடம் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்க தனியாா் நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணா்வு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியது. அதன்படி ரூ. 13 லட்சத்தில் நடைப்பயிற்சிக்கான நடைபாதை, ஓய்வெடுக்கும் இருக்கைகள், சிறுவா்கள் விளையாட உபகரணங்கள், புல்வெளி, மின்விளக்கு வசதி, கழிப்பறை மற்றும் 1000க்கும் மேற்பட்ட மரங்களுடன் கூடிய குறுங்காடுடன் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவை மேயா் எஸ்.ஏ.சத்யா திறந்துவைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் மாநகராட்சி மண்டல தலைவா் ரவி, என்ஜிஜிஓஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத் தலைவா் நீலகண்ட பிள்ளை, செயலாளா் செல்வம், தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநா் பாஸ்கா், கிருஷ்ணா, ஆறுமுகம், செயலாளா் சிவானந்தா கே ஹெட்ஜ் உட்பட பலா் கலந்துகொண்டனா்.