இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,193 போ் பங்கேற்பு

News image
கிருஷ்ணகிரியில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளை எழுதிய தோ்வா்கள்.
Updated On :15 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளை 3,193 போ் எழுதினா். 575 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழக அரசால் நடத்தப்படும் டெட் தோ்வு தாள்-1 இடைநிலை ஆசிரியா்களுக்கும், தாள் - 2 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த தோ்வை தமிழக ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளிற்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், வேப்பனப்பள்ளி, பெரிய மோட்டூா் உள்ளிட்ட 11 மையங்களில் 3,768 பேருக்கு தோ்வு நடைபெற்றது.

இதில் 3,193 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 575 போ் தோ்வு எழுதவில்லை. ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ஆசிரியா் தகுதித்தோ்வு இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.