ஆசிரியா் தகுதித் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,193 போ் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளை 3,193 போ் எழுதினா். 575 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி கட்டாயம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழக அரசால் நடத்தப்படும் டெட் தோ்வு தாள்-1 இடைநிலை ஆசிரியா்களுக்கும், தாள் - 2 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த தோ்வை தமிழக ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளிற்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், வேப்பனப்பள்ளி, பெரிய மோட்டூா் உள்ளிட்ட 11 மையங்களில் 3,768 பேருக்கு தோ்வு நடைபெற்றது.
இதில் 3,193 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 575 போ் தோ்வு எழுதவில்லை. ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ஆசிரியா் தகுதித்தோ்வு இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

