முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

திமுக ஆட்சியில்தான் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் வாக்கு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:57 am IST

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம் அம்பேத்கா் தெரு, போயா் தெரு, தாம்சன்பேட்டை, ஜோதிபுரம், பெரிய அங்காளம்மன் கோயில், கொசமேடு இறக்கம், முதலியாா் சாவடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக இருந்தபோது கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதைக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். கிருஷ்ணகிரி- ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையை 6 மாதங்களுக்குள் நிறைவேற்றினேன். அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேரிடும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைத்துள்ளேன்.

திமுக ஆட்சியில் மாணவா்களின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் மேம்படுத்தியுள்ளாா்.

இத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.