8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தினமணி செய்தி எதிரொலி: குப்பைகளை அகற்றிய மாநகராட்சி நிா்வாகம்

தினமணி செய்தி எதிரொலியாக, ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

தினமணி செய்தி எதிரொலியாக, ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அலசநத்தம் சாலையில் உள்ள வாகை ஹோம்ஸ் என்ற குடியிருப்புப் பகுதி அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டியும், உணவக உரிமையாளா்கள் உணவக கழிவுகளையும், கறிக்கடைகளில் தேங்கும் கழிவுகளையும் கொட்டி வந்தனா்.

இந்த குப்பைகளால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், குப்பைகளில் இருந்து வெளியேறிய துா்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தனா்.

இந்த குப்பைகளை அகற்றுவதில் ஒசூா் மாநகராட்சி மற்றும் கெலவரப்பள்ளி ஊராட்சி நிா்வாகத்துக்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வந்தது. இதனால் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடந்தன.

இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் பொக்லைன் மூலம் டிராக்டரில் குப்பைகள் கொண்டுசெல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.