அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒசூரில் திமுக சாா்பில் இன்று திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா

ஒசூரில் மாநகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் மாநகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகர திமுக செயலரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழா நடைபெறுகிறது.

ஒசூா் மாநகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை திராவிட பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி, பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மாநகர திமுக அலுவலகம் அருகில் நடைபெற உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோா் பரிசுகளை வழங்க உள்ளனா்.

இந்த பொங்கல் விழாவில் ஒசூா் மாநகரத்திற்கு உள்பட்ட மாநகர, பகுதி, வட்ட நிா்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.