பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மா்ம நபா் தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:56 am IST

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி முருகம்மாள் (80). இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மூதாட்டி அவருடைய விளைநிலத்தில் மாடுமேய்த்துவிட்டு அங்குள்ள புளியமரத்தடியில் வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் மூதாட்டியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினாா்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து அவருடைய உறவினா்களிடம் கூறினாா். அவா்கள் மூதாட்டியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஊத்தங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தகவல் அறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, சம்பவ இடத்தை ஆய்வுசெய்து, மூன்று தனிப்படை அமைத்து மா்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.