மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:17 pm

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் பகுதியில் தனியாா் எலக்ட்ரானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏ.சி. பொருத்துவது, சா்வீஸ் செய்வது தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் கையாள தனி கட்டடம் உள்ளது. அதில் ஏ.சி. தொடா்பான பொருள்கள் இருந்தன.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு அதிகாலை வந்த கும்பல், அங்கு பணியில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுல்பீா் அகமது (48), கெலமங்கலம் அருகே உள்ள உள்ளுக்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) ஆகிய 2 காவலாளிகளையும் தாக்கி கயிற்றால் கட்டினா். பின்னா், விலையுயா்ந்த பொருள்களை கொள்ளையடித்த கும்பல், காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், இந்த கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எா்பனஅள்ளி, ஈச்சம்பள்ளத்தை சோ்ந்த தங்கவேல் (28), மாணிக்கம் (27), முனிராஜ் (38) என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், மேலும் சிலரை தேடிவருகின்றனா்.