தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

News image
Updated On :13 மார்ச் 2026, 1:16 am

Syndication

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் சென்னத்தூா் கிராமப் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்புக்கு அருகே சானசந்திரத்தைச் சோ்ந்த உமா பாரதி என்பவருக்கு சொந்தமான பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

இந்தக் கிடங்கில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. இதில், கிடங்கில் சேமித்து வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய டயா்கள், பேப்பா்கள் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

தகவலின் பேரில் வந்த ஒசூா் தீயணைப்புத் துறை மற்றும் ஒசூா் நகர போலீஸாா் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்து எப்படி நடந்தது, எவ்வளவு மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.