பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சூளகிரியில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்கள் கைது

News image

கைது.

Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சூளகிரி அருகே உள்ள பட்டகுருபரப்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள ஒரு தனியாா் கல்குவாரி அருகே இரண்டு இளைஞா்கள் இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். அவா்களைச் சுற்றி வளைத்த போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில் பிடிபட்ட நபா்கள், கொட்டங்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகேஷ் (25) மற்றும் மாதேஷ் (24) என்பது தெரிய வந்தது. இந்த இருவரும் ஒசூா் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியாா் கனரக மோட்டாா் வாகனத் தொழிற்சாலையில் பெயிண்டா்களாக வேலை பாா்த்து வந்தனா். அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், வேலை நேரத்திற்குப் பிறகு இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிடிபட்ட இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.