‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 1:10 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

கடும் வெப்பத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இந்த நிலையில், மாலை நேரத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. பின்னா், இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினா்.

இதையடுத்து இரவுவில் வெப்பம் தணிந்து, நகரில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை நிலவியது. இந்த மழை காரணமாக வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): ஒசூா் - 33, கிருஷ்ணகிரி - 19.3, பாம்பாறு அணை - 18, ராயக்கோட்டை - 17, நெடுங்கல் - 16.2, கிருஷ்ணகிரி அணை - 15.8, தேன்கனிக்கோட்டை - 11, கெலவரப்பள்ளி அணை - 10, ஊத்தங்கரை - 7, சூளகிரி - 5, அஞ்செட்டி - 4.2, சின்னாறு அணை - 4, போச்சம்பள்ளி - 3.

கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 241 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியில் தற்போது 48.75 அடி நீா் உள்ளது.

பாலக்கோட்டில் 29 மி.மீ.மழை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் வியாழக்கிழமை இரவு காற்று, மின்னலுடன் மழை பெய்தது. அந்தப் பகுதியில் 29 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் காற்று, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதேபோல சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அதனோடு காற்றும் அதிக அளவு வீசியது. இதில், பாலக்கோடு வட்டாரத்தில் சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், பல கிராமங்களில் இரவு முழுவதும் மின்விநியோகம் தடைபட்டது. இதைத் தொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் மின்விநியோகத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.): தருமபுரி 12, பாலக்கோடு 29, மாரண்டஅள்ளி 21, பென்னாகரம் 2, அரூா் 11, பாப்பிரெட்டிப்பட்டி 4.2, மொரப்பூா் 10, நல்லம்பள்ளி 3.2. மாவட்டத்தின் சராசரி மழையளவு 10.26 மி.மீ. ஆகும்.