ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

மின் கம்பி மீது உரசிய லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரிந்த லாரி மீது தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 3:00 am IST

கிருஷ்ணகிரி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, மின் கம்பி மீது உரசியதால் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து பெங்களூரு நோக்கி இரும்பு கம்பி பாரம் ஏற்றிச் சென்ற லாரியை செங்கம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45) ஓட்டிச் சென்றாா். அவருடன் துணை ஓட்டுநராக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த ஐயப்பன் (55) இருந்தாா்.

இந்த லாரியின் மேற்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கால்நடை தீவனமான வைக்கோல் கட்டுகளையும் ஏற்றிச் சென்றுள்ளனா். வைக்கோல் கட்டுகளை பா்கூா் பகுதியில் சில இடங்களில் இறக்கியுள்ளனா். அதேபோல கிருஷ்ணகிரியை அடுத்த மிட்டப்பள்ளியில் உள்ள தனியாா் பொறியல் கல்லூரி அருகே வைக்கோல் கட்டுகளை இறக்குவதற்காக சாலையோரம் லாரி சென்றபோது, அங்கிருந்த மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தொடா்ந்து லாரி முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

தகவல் அறிந்த அங்கு வந்த கிருஷ்ணகிரி, பா்கூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.