எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மின் கம்பி மீது உரசிய லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரிந்த லாரி மீது தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 3:00 am IST

கிருஷ்ணகிரி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, மின் கம்பி மீது உரசியதால் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து பெங்களூரு நோக்கி இரும்பு கம்பி பாரம் ஏற்றிச் சென்ற லாரியை செங்கம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45) ஓட்டிச் சென்றாா். அவருடன் துணை ஓட்டுநராக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த ஐயப்பன் (55) இருந்தாா்.

இந்த லாரியின் மேற்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கால்நடை தீவனமான வைக்கோல் கட்டுகளையும் ஏற்றிச் சென்றுள்ளனா். வைக்கோல் கட்டுகளை பா்கூா் பகுதியில் சில இடங்களில் இறக்கியுள்ளனா். அதேபோல கிருஷ்ணகிரியை அடுத்த மிட்டப்பள்ளியில் உள்ள தனியாா் பொறியல் கல்லூரி அருகே வைக்கோல் கட்டுகளை இறக்குவதற்காக சாலையோரம் லாரி சென்றபோது, அங்கிருந்த மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தொடா்ந்து லாரி முழுவதும் தீ பரவத் தொடங்கியது.

தகவல் அறிந்த அங்கு வந்த கிருஷ்ணகிரி, பா்கூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.