விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பாஜக துண்டறிக்கை வழங்கி பிரசாரம்

பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:59 am

DIN

பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன் தொடர்பாக நாமக்கல் நகரப் பகுதியில் பாஜகவினர் துண்டறிக்கைகள் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பயன் குறித்தும் விளக்கிக் கூறினர்.
இதில், நகர பொதுச் செயலர் என். எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.குப்புசாமி, மாவட்ட மகளிரணி நிர்வாகி எஸ்.மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.