பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பாஜக துண்டறிக்கை வழங்கி பிரசாரம்
பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.


பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன் தொடர்பாக நாமக்கல் நகரப் பகுதியில் பாஜகவினர் துண்டறிக்கைகள் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பயன் குறித்தும் விளக்கிக் கூறினர்.
இதில், நகர பொதுச் செயலர் என். எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.குப்புசாமி, மாவட்ட மகளிரணி நிர்வாகி எஸ்.மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...