குமாரபாளையத்தில் 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு காவல்துணைக் கண்காணிப்பாளர் எஸ். சண்முகம் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தைக் கொடியைசைத்துத் தொடக்கி வைத்தார்.
இதில், பொதுமக்கள் மற்றும் போலீஸார் தலைக்கவசம் அணிந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில், பாதுகாப்பான சாலைப் பயணம், போக்குவரத்து விதிகள், விபத்து பாதுகாப்பு உபகரணங்கள், விதிகளை மதித்து வாகனங்கள் இயக்குதல், விதிமீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளைத் தவிர்ப்பதோடு, உயிரிழப்புகளையும், உடல் உறுப்பு சேதத்தையும் தவிர்க்கலாம் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.