இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தேர்தல் பணியில் ஈடுபடும் ஒளிப்பதிவாளர்களுக்கு தபால் ஓட்டு வேண்டும்: சங்க பொதுக்குழு தீர்மானம்

திருச்செங்கோடு வட்டார வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள்

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

திருச்செங்கோடு வட்டார வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கப் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
சங்கத்தின் புதிய தலைவராக ஜெயக்குமார், செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக முருகேசன் துணைத் தலைவராக குலோத்துங்கன்,துணைச் செயலாளராக மனோஜ் கண்ணன், மக்கள் தொடர்பு அலுவலராக தேவேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
புதிய நிர்வாகிகளை வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க மாநில தலைவர் மாதேஸ்வரன்,துணைத் தலைவர் சூர்யா, மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் பதவியேற்பு செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில்  தமிழகத்தில் உள்ள அனைத்து புகைப்படக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து தனி நலவாரியம் அமைக்கவும்,அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல் போன்ற தேர்தல் பணிகளுக்கு சங்கமே டெண்டர் எடுக்க வேண்டும்.
தேர்தல் பணிக்குச் செல்லும் ஒளிப்பதிவாளர்களுக்கு தபால் ஓட்டுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.