ராசிபுரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக லாட்டரி மொத்த விற்பனையாளர்களின் ஊழியர்கள் இருவர் திங்கள்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், அதிக அளவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் உள்ளன. இந்நிலையில் ராசிபுரம் நகர வங்கி தெருவில் லாட்டரி விற்பனை மையங்களுக்கு வந்த இளைஞர்களுக்கும், அப்பகுதி குடியிருப்போர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து லாட்டரி விற்பனை மையங்களை அப் பகுதியினர் தாழிட்டுப் போராட்டம் நடத்தியதால், போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அப் பகுதியினர் கூறிய புகாரின்பேரில் ராசிபுரம் நகர போலீஸார் லாட்டரி மொத்த விற்பனையாளர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர்.
இதில் மூலப்பள்ளிப்பட்டி கட்டபுளியமரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் பழனிசாமி (35), கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேபோல் மற்றொரு ஊழியர் கட்டனாச்சம்பட்டி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் பழனிசாமி (45) லாட்டரி சீட்டு விற்றதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

உலகக் கோப்பை கால்பந்து 2026!

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


