நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் ஆர்.மெய்ஞானமூர்த்தி தெரிவித்தது:
ஏரி, குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது பெரும்பாலான விவசாயிகள் ஆண்டுகணக்கில் வலியுறுத்தி
வருகின்றனர்.
நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சில கிராமங்களில் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்வதுடன் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை!
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

