சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சாலை விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

மோகனூரில் சாலை விதிகளை மீறிய 2 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Updated On :23 ஜூலை 2018, 9:38 am IST

மோகனூரில் சாலை விதிகளை மீறிய 2 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
நாமக்கல் வடக்கு  வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்பேரில்,  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகஆனந்த்,  கலைச்செல்வி ஆகியோர் மோகனூர்-வாங்கல் காவிரி மேம்பாலம் அருகே சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது மோகனூரில் இருந்து வாங்கல் வழியாக கரூர்,  கரூரில் இருந்து வாங்கல் வழியாக மோகனூர் பகுதிக்கு வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
100-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்ததில்,  தகுதிச் சான்று புதுப்பிக்காமலும்,  சாலை போக்குவரத்து வரி செலுத்தாமலும் இயக்கிய இரண்டு பயணிகள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்,  அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது,  ஓட்டுநர் உரிமம் இல்லாதது,  பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி இல்லாதது என 25 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.