வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் மானம் காப்பற்றப்பட வேண்டும். அதற்காக சில இடங்களில் நமக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஏற்பட வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பொங்கலூர் நா.பழனிசாமி.
நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வரவேற்றார். மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி பேசியது: 2016 சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீதம் வாக்குகள் அதாவது 18 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத்தான் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. கொங்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்றது. அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளில் 25 தொகுதிகள் 5,000 வாக்குகளுக்குக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசம்தான் இருந்தது.
ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டது போல், இப்போதுள்ள அ.தி.மு.க. தலைமைக்கு தேர்தலை எதிர்கொள்ளும் பலம் இல்லை.
ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாதது போன்றவற்றால் தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.
இதனால் வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க.வினர் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். இதற்காக தி.மு.க.வினர் கட்டுக்கோப்பாகப் பணியாற்ற வேண்டும். வேலை செய்யாத கட்சி நிர்வாகிகள் யாராக இருந்தாலும், தலைமையின் உத்தரவின்படி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த மாதம் இறுதி முதலே மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நானும், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபனும் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளோம்.
கள்ள வாக்குப் போடுவதைத் தடுக்க, பூத் கமிட்டி உறுப்பினர்கள் அத்தகைய நபர்களை இப்போதே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற முன்வர வேண்டும். இல்லையென்றால், தலைமை உத்தரவுடன் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் மானம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக சில இடங்களில் நமக்கு மரியாதை குறைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட வேண்டும் என்றார்.
இதில் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் பேசியது: பூத் கமிட்டியினர் தினமும் 2 மணி நேரம் கட்டாயம் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தி.மு.க.வுக்கு 600 வாக்குகள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வேண்டுமென்றே ஆபாசமாக எடுத்திருக்க மாட்டார்கள்..! பெத்தி பட சர்ச்சைக்கு கங்கனா ரணாவத் பதில்!

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


