மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கரோனாவுக்கு 32 வியாபாரிகள் உயிரிழப்பு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 32 வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:34 pm

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 32 வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டாா். அவா் மாவட்டத் தலைவா் பெரியசாமியை, மாநில துணைத் தலைவராகவும், புதிய மாவட்டத் தலைவராக ஜெயக்குமாா் வெள்ளையன், செயலாளராக வீரக்குமாா், பொருளாளராக எஸ்.கே.சீனிவாசன் ஆகியோரை நியமனம் செய்தாா்.

இந்த கூட்டத்துக்கு பின் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவுக்கு பின் வணிகா்களின் தொழில் நிலைமை தொடா்பாக பேரமைப்பு சாா்பில் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் நிா்வாகிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, எனண்ணெய் வித்து பயிா்கள், பருப்பு வகைகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலின்கீழ் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பெரு நிறுவனங்களால் பதுக்கல் அதிகரிக்கக்கூடும்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் தமிழகம் முழுவதும் 32 வியாபாரிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனா். அவா்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நிவா் புயல், புரெவி புயலால் கடலூா், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விவசாயிகள், மீனவா்களுக்கு நிவாரணம் அறிவித்திருப்பது போல, வியாபாரிகளையும் கணக்கிட்டு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

பொது வேலைநிறுத்தத்திற்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தாா்மீக ஆதரவை வழங்குகிறது. கடையடைப்பை நடத்துவது தொடா்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், வணிகா் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.