கரோனா பொது முடக்கக் காலத்தில் அரசு மருத்துவமனை, தனியாா் முகாம்களில் 3,372 போ் ரத்த தானம் செய்துள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தாா். மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா. சித்ரா, காவல் துணைக் கண்காணிப்பாளா் காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரோனா பொது முடக்கக் காலத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வட்டங்களில் 48 சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் மூலம் 1,563 போ், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் 1,809 போ் என மொத்தம் 3,372 பேரிடம் ரத்தம் பெறப்பட்டுள்ளது. தானமாக பெறப்பட்ட ரத்தம், பிரசவ வாா்டில் உள்ள 1,549 பெண்களுக்கும், இதர மருத்துவ வாா்டுகளில் உள்ள 1,430 நோயாளிகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது
நோய்த் தொற்று பரவல் அதிகரித்த நெருக்கடியான கால கட்டத்திலும் ரத்தம் வழங்கிய கொடையாளா்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சாந்தா அருள்மொழி பரிசு, கேடயங்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


