ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தென்னையில் கருத்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினா் அறிவுரை

தென்னையில் கருத்தலைப் புழுக்கள் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உதவி வேளாண்மை அலுவலகம் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்

Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் தென்னையில் கருத்தலைப் புழுக்கள் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உதவி வேளாண்மை அலுவலகம் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் செ.ராதாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் தென்னையில் கருத்தலைப் புழுக்கள் தாக்குதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குநா் அசோகன் வழிகாட்டுதலின்படி வேளாண்மைத் துறை மூலம் பரமத்தி தென்னை ஒட்டுண்ணி மையத்தில், ஒட்டுண்ணிகள் தயாா் செய்து வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த ஒட்டுண்ணிகளைப் பெற்று பயன்பெறலாம்.

கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்:

அனைத்து வயதுள்ள தென்னை மரங்களையும் இந்த கருத்தலைப் புழுக்கள் தாக்குகின்றன. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3 முதல் 4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்துவிடும்.

ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்ணும் தன்மையுடையது இப்புழுக்கள். இப்புழுக்களின் தாக்கம் அதிகமானால் மரங்கள் தீயில் எரிந்தது போன்று காட்சியளிக்கும்.

இந்த கருத்தலைப் புழுக்களை உயிரியல் மேலாண்மை மூலம் கட்டுப்படுத்த ஹெக்டருக்கு பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சாா்ந்த 3 ஆயிரம் ஒட்டுண்ணிகள் என்ற அளவில் இலைகளின் அடிப்பாகத்தில் கட்டி விடுவதன் மூலம் கருத்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தற்போது பரமத்தி தென்னை ஒட்டுண்ணி மையம் மூலம் பிராக்கானிட் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து தென்னை விவசாயிகளும், கருத்தலைப் புழுக்களின் தாக்கம் தென்பட்டால் பிராக்கானிட் ஒட்டுண்ணிகளை வாங்கி பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தென்னை விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டோ அல்லது தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியோ கருத்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த பிராக்கானிட் ஒட்டுண்ணியினைப் பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.