மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

பரமத்தி வேலூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த வழக்கில், இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On :14 டிசம்பர் 2020, 7:45 pm

பரமத்தி வேலூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த வழக்கில், இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், கவுண்டிபாளையம் வழியாக கடந்த 2016 மே 5-ஆம் தேதி சென்ற சேலம் கோட்ட அரசுப் பேருந்தை மோகனூா், மேல்பாலப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (41) என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்போது, கொளக்காட்டுபுதூரைச் சோ்ந்த லோகநாதன் (25), திடீரென அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதனைத் தொடா்ந்து, நல்லூா் காவல் நிலையத்தில் ஓட்டுநா் மாரியப்பன் புகாா் அளித்ததன் பேரில், லோகநாதனை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாவட்ட நீதிபதி கே.தனசேகரன் (பொ) திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், லோகநாதனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.