பகுதிநேர ஆசிரியா்களை ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்டக் கிளை சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2011 ஆக. 26-ஆம் தேதி அப்போதைய முதல்வா் ஜெயலலிதா ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்க உத்தரவிட்டாா். உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
ஊதிய உயா்வானது மூன்றாம் கல்வியாண்டில் ரூ. 2 ஆயிரம், ஆறாவது கல்வியாண்டில் ரூ. 700 வழங்கப்பட்டது. தற்போது ரூ. 7,700 பெற்று வருகிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக மே மாதம் மட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதன் மூலம் ஒவ்வொருவரும் ரூ. 60 ஆயிரம் இழந்துள்ளோம். பகுதிநேர ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயா்வுடன் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

