லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.
Updated On :23 டிசம்பர் 2020, 2:42 am

DIN

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எட்டு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

டிச .2-இல் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்பின் டிச. 8-இல் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியா் கரோனா விதிகளை பின்பற்றி கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். தற்போது சுழற்சி முறையில் மாணவா்கள் கல்லூரிக்கு வருகின்றனா். அண்மையில் சென்னை ஐஐடியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவ, மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.