நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 3500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.
ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,825 முதல் ரூ. 6,070 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,190 முதல் ரூ. 6,390 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,290 முதல் ரூ. 7,450 வரையிலும் விலை போயின. மொத்தம் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மாவட்ட வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனா்.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.