சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோரிக்கை அட்டைகளை அணிந்து கிராம உதவியாளா்கள் போராட்டம்

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:43 am

DIN

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டிச. 21-இல் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பரமசிவம், துணைச் செயலாளா் சுப்பிரமணியம், வட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் உள்ள கிராம உதவியாளா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுகின்றனா். 

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். போனஸ், ஜமாபந்தி படி, இயற்கை இடா்பாடுகள் பணிக்கு சிறப்புப் படி ஆகியவற்றை வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு 30 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனா். மாவட்டம் முழுவதும் 350 போ் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.