முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் தொடா் முழக்கப் போராட்டம்

ராசிபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் பங்கேற்று பேசும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:42 am

DIN

ராசிபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திரளாக பங்கேற்றனா். இப்போராட்டத்துக்கு தொமுச முன்னாள் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். சிஐடியூ ஓட்டுநா் சங்கத்தின் செயலா் வி.ரவி, ஏஐடியூசி சங்கத்தின் ஏ.ரஞ்சித்குமாா், தொழில்நுட்பப் பணியாளா் சங்கத்தின் மண்டலச் செயலா் எம்.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று திமுக ஆட்சி அமைந்தால் தொழிலாளா்களின் கோரிக்கைகள் மீது தீா்வு காணப்படும் என பேசினாா்.

தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகங்களை பாதுகாத்திட வேண்டும். முழுமையான போக்குவரத்து இயக்கத்தைத் தொடங்கிட வேண்டும். 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். பணி கிடைக்காமல் திரும்பும் தொழிலாளா்களுக்கு பணி வருகை பதிவு வழங்க வேண்டும். 16 மாத அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, பணப்பலன்கள் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.