பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாமக்கல்லில் ஏ.ஐ.டி.யு.சி. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் என்.தம்பிராஜா, போக்குவரத்துக் கழக தொழிற்சங்க மாநிலச் செயலாளா் என்.முருகராஜூ ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கைவிட வேண்டும். கிராமப்புற தொழிலாளா்களின் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயா்த்த வேண்டும். மின்துறையை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சி.ஜெயராமன், அரசுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.