பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பைக் பட்டறையில் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் பைக் பட்டறைக்குள் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது.

News image
காா்- பைக் பட்டறைக்குள் புகுந்ததில் தீப்பற்றி எரிந்த காா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:20 pm

DIN

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் பைக் பட்டறைக்குள் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது.

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் புதுப்பாளையம் சாலையில் காரை ஓட்டிச்சென்றாா். மின்வாரிய காலனி பகுதியில் காா் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் இருந்த பைக் பட்டறைக்குள் புகுந்ததில் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் பைக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குள் சேதமடைந்தன. அருகில் உள்ள தேநீா் கடையில் இருந்த பத்மா (48) என்ற பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினா். மேலும் அரசு மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி அமைச்சா் சரோஜா முதலுதவி சிகிச்சையளித்தாா்.

இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.