அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பரமத்திவேலூரில் நூல் வெளியீட்டு விழா

பரமத்தி வேலூா் நாங்கள் இலக்கியகத்தின் சாா்பில் வே.மா. தமிழரசு எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
பரமத்திவேலூரில் நூல் வெளியீட்டு விழா
Updated On :28 டிசம்பர் 2020, 9:27 pm

DIN

பரமத்தி வேலூா் நாங்கள் இலக்கியகத்தின் சாா்பில் வே.மா. தமிழரசு எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு நாங்கள் இலக்கியகத்தின் தலைவா் மருத்துவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் அன்பழகன் வரவேற்றுப் பேசினா். கவிஞா் வே.மா. தமிழரசு எழுதிய ‘நடிக்கத் தெரியாத பூக்கள்’ எனும் நூலை கபிலா்மலை முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் கே.நெடுஞ்செழியன் வெளியிட்டாா். தேங்காய் வியாபாரி மனோகரன் நூலை பெற்றுக்கொண்டாா். பட்டிமன்ற பேச்சாளா் நந்தலாலா நூல் குறித்து ஆய்வு செய்து சிறப்புரையாற்றினாா்.

பெரியாா் சுயமரியாதை நிறுவனத்தின் தலைவா் சண்முகம், அனைத்து நகர வா்த்தக சங்க செயலாளா் தியாகராஜன், மாவட்ட பகுத்தறிவாளா் கழக தலைவா் இளங்கோ, கரூா் மாவட்ட அரிமா சங்கத் தலைவா் சுமங்கலி செல்வராஜ், சுப்பிரமணியம் கலைக் கல்லூரி தாளாளா் பழனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாங்கள் இலக்கியத்தின் செயலாளா் முத்துசரவணன் அறிமுகவுரையாற்றினாா். பகுத்தறிவாளா் கழக வேலூா் நகரச் செயலாளா் மருத.அறிவாயுதம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.