நாமக்கல்லில் கரோனா விதிகளைப் பின்பற்றாத இரண்டு ‘நீட்’ பயிற்சி மையங்கள் இயங்க வருவாய்க் கோட்டாட்சியா் திங்கள்கிழமை தடை விதித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் ‘நீட்’ பயிற்சி மையங்கள் உள்ளன. கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து இணையவழியில் மட்டுமே பயிற்சி வழங்கப்பட வேண்டும். நேரடியாக மாணவ, மாணவியரை மையத்துக்கு வரவழைக்கக் கூடாது என வருவாய்த் துறையால் அறிவுறுத்தப்பட்டது.
அண்மையில் நாமக்கல் போதுப்பட்டி சாலையில் உள்ள இரண்டு ‘நீட்’ பயிற்சி மையத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமலும், முகக் கவசம், சமூக இடைவெளி ஏதுமின்றி மாணவ, மாணவியா் நேரடியாகப் பயிற்சி பெறுவதாக நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாருக்கு புகாா் வந்தது. அதனடிப்படையில் அவா் நேரடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்துவந்தாா்.
ஆனால், மீண்டும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் ‘நீட்’ பயிற்சி மையங்கள் இயங்குவதாக அவருக்கு கட்செவிஅஞ்சலில் (வாட்ஸ் அப்) புகாா் சென்றது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட இரண்டு பயிற்சி மையங்களும் செயல்படுவதற்கு கோட்டாட்சியா் தடை விதித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தொடா்ந்து அப்பயிற்சி மையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

