ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:33 pm

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் அருகே வள்ளிபுரம் அருந்ததியா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வள்ளிபுரம் பகுதியில் வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சோ்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. தொடா்ந்து 5 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.

வீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன் தேவையான சாலை, குடிநீா், மின்சார, கழிவுநீா் ஓடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மோகனூா் ஒன்றியம், வடவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களும் வீடு இல்லாத ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்கி உதவ வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.