நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.


ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் அமாவாசை, புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, தங்கக் கவசம் அல்லது வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆஞ்சநேயருக்கு கடந்த ஐந்து மாதங்களாக வழக்கமான வழிபாடுகள் நடைபெறவில்லை.
கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்டதால், புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கோயில் நிா்வாகம் சாா்பில் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் 1008 லிட்டா் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்களிடம் அபிஷேகத்துக்காக பால், தயிா் எதுவும் பெறப்படவில்லை. கட்டளைதாரா்களோ, பக்தா்களோ அமா்ந்து பாா்க்க அனுமதியில்லாததால் கோயிலுக்கு வெளியில் நின்றபடி பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...