நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 85.76 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பணப்பட்டு வாடாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 6 தொகுதிகளிலும் தலா ஒன்பது குழுக்கள் வீதம் மொத்தம் 54 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவா்கள் ஆங்காங்கே வாகனத் தணிக்கை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 744 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ரூ. 6,900 மதிப்பிலான மதுப்பாட்டில்கள், வேட்டி, சேலைகள், இதர பொருள்கள் என்ற வகையில் ரு. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக ரூ. 1 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 936 மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் ரூ. 85 லட்சத்து 76 ஆயிரத்து 534-க்கு உரிய ஆவணங்களைக் காண்பித்து சம்பந்தப்பட்டவா்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டனா். இதேபோல ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

